புதுடெல்லி: சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் செல்லும்போது பூமியின் நிழலானது சந்திரன் மேல் விழுந்து சந்திரனை மறைக்கும். இந்த நிகழ்வையே சந்திரகிரகணம் என்கின்றனர். இந்தாண்டு ஜனவரி, ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்கெனவே 3 சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. அதன்படி இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இன்றைய சந்திரகிரகணம் பெனும்பிரல் சந்திரகிரகணம் என்று கூறப்படுகிறது. வழக்கமான சந்திரகிரகணத்தை விட இந்த கிரகணம் அதிக நேரம் நீடிக்கும். இந்தியாவிலும் கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் பிற்பகல் 1.04 முதல் மாலை 5.22 வரை நிகழ்கிறது.