உடுமலை: குமரலிங்கம் வாரச்சந்தையில் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரலிங்கம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் காய்கறி சந்தை நடக்கிறது. குமரலிங்கம் மட்டுமின்றி சாமராயபட்டி, பெருமாள்புதூர், கொழுமம், ருத்ராபாளையம், ஆத்தூர், என்.ஜி.புதூர், மயிலாபுரம், மடத்தூர் உள்பட பல்வேற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இந்த சந்தைக்கு காய்கறி வாங்க வருகின்றனர்.