பள்ளி வளாகத்திற்குள் உலா வந்த காட்டுயானை

கூடலூர்: கூடலூரை அடுத்த மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் ஜி.ஆர்.ஜி தனியார் பள்ளி உள்ளது. கொரோனா பரவல் தடை காரணமாக இங்கு வகுப்புகள் எதுவும் நடைபெறுவதில்லை. நேற்று அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை பகல் நேரத்தில் உள்ளே வந்து உலவி சென்றுள்ளது.இந்த யானை கடந்த பல வருட காலமாகவே மசனகுடி வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிகிறது.

 

பொதுமக்கள் வழங்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்டும் செல்கிறது. இந்த யானையால் பொதுமக்களுக்கோ உடைமைகளுக்கு எந்தவித தொந்தரவும் இதுவரை ஏற்பட்டதில்லை. கடந்த பல வருடங்களுக்கு முன் துதிக்கையில் காயமடைந்து சுற்றிய யானையை வனத்துறை சார்பில்  ஊழியர் ஒருவர் உணவு மருந்து கொடுத்து பாதுகாத்து உள்ளார். அவரிடம் பழகிய யானை பின்பு பொதுமக்களிடம் பழகத் துவங்கி உள்ளது.  இந்த யானை வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: