ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் 2 இந்திய வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் சமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் தினமும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, எல்லையோர கிராமங்கள், இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதில், இந்திய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்திய வீரர்கள் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.  இதற்கு இந்திய வீரர்கள்  தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், இந்த சண்டையில் பிரேம் பகதூர் காட்ரி, சுக்பீர் சிங் என்ற 2 இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட அவர்கள், சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தனர்.

Related Stories: