ஆத்தூர்,:முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் புயல்பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.சேலத்தை அடுத்த ஆத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இன்று ) நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் புயல் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. புயல் நேரத்தில் முதல்வர் களத்தில் இறங்கி பணியாற்றி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார். எம்ஜிஆரின் வரலாறு தற்போது திரும்பியிருக்கிறது. அடையாறில் வெள்ளம் சூழ்ந்து விடாமலிருக்க செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சிறிது சிறிதாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.