கோவை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று காலை கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு ெசன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசியல் கட்சியினர் நிகழ்ச்சி மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டம் நடக்கும்போது அதுதொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுகிறது. அனைவருக்கும் பொதுவாக இல்லாமல், எதிர்கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.