உடன்குடி:அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி திருவிழாவில் விரதம் மேற்கொள்வதற்காக கோயில் வளாகம், பிரகார மண்டபம், தனியார் விடுதிகளில் தங்கியிருப்பர். இந்தாண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மாலையில் ஜெயந்திநாதர், அம்பாளுடன் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தை வந்து சேர்ந்தார். மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும் துவங்கியது. முன்னதாக சூரபத்மன் சிவன் கோயிலிலிருந்து கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்தார்.