சென்னை: “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைத்ததற்கு மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டம் தான் காரணம்” என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னையில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று அளித்த பேட்டி: திமுக என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல தொடர்ந்து, தன்னுடைய பணியை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. நிச்சயமாக தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆற்றல் இருக்கும்.அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்தார்கள். 5 அமைச்சர்கள் கவர்னரை சென்று பார்த்தார்கள். அப்போது கவர்னர் அந்த மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை. எப்போது கையெழுத்து போடுகிறார்.