அம்பாலா, :‘கோவாக்சின்’ மூன்றாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை அரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது. அரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் அனில் விஜுக்கு, அம்பாலா கான்ட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டது. அவருக்கு தடுப்பூசி போடும் முன், மருத்துவக் குழுவினர் அவரது உடலை பரிசோதனை நடத்தினர். கோவிட் -19 மாநில நோடல் அதிகாரி டாக்டர் துருவ் சவுத்ரி, முதன்மை ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர் சவிதா வர்மா, இணை புலனாய்வாளர் டாக்டர் ரமேஷ் வர்மா ஆகியோர் கொண்ட குழுவினர் இப்பணியை ேமற்கொண்டனர்.