புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலின்போது உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் மனைவிக்கு 18 ஆண்டுகளுக்கு பின் ரூ.20 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப். படையை சேர்ந்த ரமேஷ் குமார் என்ற வீரர், 2002ம் ஆண்டு நடந்த ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தோடா நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அை டந்தார். இவரது மனைவி பிரமிளா தேவி அரியானாவின் பிவானியில் வசித்து வருகிறார். தனது கணவர் மறைவுக்கு பின்னர் கருணை தொகை வழங்காதது குறித்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கை ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.