சின்னாளபட்டி: ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு 22 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் வருவாய், ஜாதி, இருப்பிடம் சான்றிதழ்களும், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளை வாங்க தினமும் வந்து செல்கின்றனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 பயனாளிகள் வரை வந்து செல்கின்றனர்.