வாடிக்கையாளர்கள் டெபாசிட் பணம் பாதுகாப்பாக உள்ளது..!! அச்சப்பட தேவையில்லை; லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகி தகவல்

டெல்லி: வாடிக்கையாளர்கள் டெபாசிட் பணம் பாதுகாப்பாக உள்ளது அச்சப்பட வேண்டாம் என லெஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நெருக்கடியில் மும்பை பங்குச் சந்தையில் ரூ.15.50-ஆக இருந்த லெட்சுமி விலாஸ் வங்கிப் பங்கு விலை ரூ.12.40-ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது. மேலும் லட்சுமி விலாஸ் பங்கு விலை பங்குச்சந்தையில் 20% சரிந்திருந்துது. அபார வளர்ச்சி பெற்று லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 4 ஆண்டுகளாக சரிவை சந்தித்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வங்கி தனது செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி  தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்தது. மருத்துவ சிகிச்சை, கல்வி போன்ற எதிர்பாராத செலவினங்களுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்கமுடியும்.

டிசம்பர் 16 வரை இந்த கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்த நிலையில்,  லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடைய தேவையில்லை என வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி டி.என் மனோகரன் கூறுகையில், டெபாசிட் செய்தவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது.  2020ம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.  2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.  ஏடிஎம் மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.

Related Stories: