விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.  மின் மோட்டாரில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு, ஜெரோமின் இருதயராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு, விளாத்திகுளத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: