லக்னோ: குழந்தை பேறு கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையால் சிறுமி ஒருவர் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்டிருப்பது உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கான்பூரை ஒட்டிய புறநகர் பகுதியில், உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் கிடந்தது. உடலை கைப்பற்றிய உத்திரப்பிரதேச காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தை பேறு கிடைப்பதற்காக சிறுமியை கொன்று நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியை நரபலி கொடுத்த அங்குல், பீரன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து கான்பூர் எஸ்.பி. பிரிஜேஷ் குமார் தெரிவித்ததாவது, பரசுராம் என்பவர் தான் அங்குல், பீரன் ஆகியோருக்கு பணம் கொடுத்து இருக்கிறார். இருவரும் மது அருந்திவிட்டு சிறுமியை கடத்தியிருக்கின்றனர்.