கொரோனா தனிமையில் இங்கி. பிரதமர்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஏப்ரல் மாதம்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜான்சனை, எம்பி லீ ஆண்டர்சனை சந்தித்து பேசினார்.  

அதன்பின், ஆண்டர்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் தடுப்பு வழிகாட்டுதலின்படி, போரிஸ் ஜான்சன் வீட்டின்  தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டாலும், வீட்டிலிருந்தபடியே அரசு அலுவலக பணிகளை  கவனித்து வருகிறார்.

Related Stories: