ஆவடி: ஆவடி, தேவி நகர், முத்துகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (33). ஐ.டி.நிறுவன ஊழியர். இவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், இவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஜெகதீஸ்வரன் வீட்டை பூட்டி விட்டு மனைவி, குழந்தைகளுடன் குரோம்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர், அவர் மீண்டும் குடும்பத்துடன் நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு திறந்துகிடந்தது.