அகமது படேல் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேலுக்கு கடந்த மாதம் 1ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடைய உடல்நிலை மோசமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டார்.

மணிப்பூர் முதல்வருக்கு தொற்று: மணிப்பூர் மாநிலத்தில் பாஜவை சேர்ந்த பிரென் சிங் முதல்வராக இருக்கிறார். இவர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே, சமீப நாட்களாக என்னை சந்தித்தவர்கள், பரிசோதனை செய்து கொள்ளும்படியும் ேவண்டுகிறேன்,’ என கூறியுள்ளார்.

Related Stories: