புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேலுக்கு கடந்த மாதம் 1ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடைய உடல்நிலை மோசமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நேற்று மாற்றப்பட்டார்.