தீபாவளி பண்டிகை ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்கள், புத்தாடை

காஞ்சிபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு சார்பில் சாலையோரத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.உதவிடத்தான் பிறந்தோம் தொண்டு நிறுவனம் சார்பில் விளிம்புநிலை மக்களுக்கு  சுய தொழில் ஆரம்பித்து தந்து அவர்களை சொந்த காலில் நிற்க உதவி செய்தல், ஆதரவற்ற, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நல உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஞ்சிபுரம், சென்னை, கோவை, விருதுநகர், நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளில் சாலையோரத்தில் உள்ள ஆதரவற்றோர் 300 பேருக்கு நேற்று உணவுப் பொட்டலங்கள், புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Related Stories: