குமரி: குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. சென்னையிலும் லேசான முதல் மிதான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.