சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், டிவிட்டரில் கூறியிருப்பதாவது: தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுத கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: