ஷில்லாங்: உல்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜ்கோவா, தனது கூட்டாளிகளுடன் சரணடைந்தான்.
இது குறித்து மேகாலயா டிஜிபி சந்திராந்தன் கூறியதாவது: பல பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக கரோ மலைப்பகுதி உள்ளது. இதனால், தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு சிறப்பு படைகளையும், தாக்குதல் நடவடிக்கைகளையும் இப்பகுதியில் மேகாலயா அரசு அதிகரித்தது. இதனால், பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. பல தீவிரவாதிகள் சரணடைந்து வருகின்றனர். இதன் ஒரு முக்கிய கட்டமாக, தடை செய்யப்பட்டுள்ள உல்பா அமைப்பின் தலைவர்களில் ஒருவனான ராஜ்கோவா நேற்று தனது 4 கூட்டாளிகளுடன் ராணுவத்திடம் சரணடைந்தான்.