உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, ராமசாமிநாயக்கன்பட்டி-கோகிலாபுரம் ரோட்டில் உள்ள தாமரைக்குளம் கண்மாயில், ஆண்டுதோறும் வலசை போதல் நடக்கும். இந்த சமயங்களில் ஆஸ்திரேலியாவின் கூளைக்கிடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அரியவகை பறவைகள் வருகை தரும்.
கண்மாயில் 4 மாதம் தண்ணீ தேங்குவதால், பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து இரை தேடும். இந்நிலையில், கண்மாயில் நேற்று வெளிநாட்டு பறவை ஒன்று, நடக்க முடியாமலும், பறக்க முடியாமலும் தவித்தது. இதையறிந்தராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பவுன்ராஜ் பறவையை மீட்டு, உத்தமபாளையம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.