சென்னை: 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் எனவும், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துக்கள் அரசிடம் சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியிருக்கிறது. பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கடந்த 9ம் தேதி தமிழகம் முழுவதும் கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக தனியார் பள்ளியை சேர்ந்த பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் எனவும், அரசு பள்ளியை சேர்ந்த பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.