அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெற்றோருடன் தூங்கிய 3 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (29). கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவர், மனைவி சந்தியா (26) மற்றும் சஞ்சனா என்ற 3 மாத பெண் குழந்தையுடன் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தங்கியிருந்தார். தினசரி வேலை முடிந்ததும், இரவில் அங்குள்ள 3 சக்கர வாகனத்தில் 3 பேரும் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ரமேஷ், தனது மனைவி, குழந்தையுடன் தூங்கியுள்ளார்.