சென்னை: பாஜ தற்போது செய்து வரும் செயலுக்கு எங்கள் ஆதரவும் கிடையாது எதிர்ப்பும் கிடையாது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் தனியார் திருமண மண்டபத்தில் பாலகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிம் அவர் கூறியது: அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜவின் கடமை. அவர்கள் தற்போது செய்து வரும் செயல் மக்களிடம் பாசிட்டிவாக போய் சேருகிறதா என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு எங்கள் ஆதரவும் கிடையாது எதிர்ப்பும் கிடையாது.