வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியிருக்கிறது. 210 நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கோவிட் - 19 கொல்லுயிரி, அமெரிக்காவில் அதிவேகம் எடுத்துள்ளது. இதுவரை 1 கோடியே 3 லட்சம் பேர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 512 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, கொரோனா தொற்றால் பாலியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 768ஆக அதிகரித்துவிட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தரமான முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து அக்கழகத்தினர் தெரிவித்ததாவது, குழுக்களை ஒன்றிணைக்கும் அனைவரும் கோவிட் சோதனை செய்துகொள்வது அவசியம். பொது வெளிகளில் செல்லும் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களால் இளைய தலைமுறையினருக்கு தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.