டெல்லி: சென்னை - பெங்களூரு இடையேயான அதிவேக சாலை அமைப்பதற்கான தொடக்க பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னைக்கும், பெங்களூருக்கு இடையே 263 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு அதிவேக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் 95% முடிந்துள்ள நிலையில் முதற்கட்ட பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரி இருக்கிறது. இந்த அதிவேக சாலையை வரும் 2024-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.