இந்திய அணியின் மாஜி கேப்டன் தோனி. இவர் ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்கு மூன்று முறை கோப்பைகளை வென்று தந்தார். ஐபிஎல்லில் பங்கேற்ற 10 சீசனிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று பெருமைப்படும் அணியாக சென்னை விளங்கியது. ஆனால் தற்போது துபாயில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள 13வது சீசனில் துவக்க வீரர்கள் சொதப்பல், முன்னணி வீரர்களின் பேட்டிங் திறன் குறைந்தது, மோசமான பீல்டிங் போன்ற காரணமாக சென்னை 7 வது இடம் பெற்று சோகத்துடன் இந்தியா திரும்பியது.