இறைச்சிகடையை உடைத்து 12 ஆடுகள் திருட்டு

ஆவடி: இறைச்சி கடையை உடைத்து 12 ஆடுகளை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடுகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வேணுகோபால் நகரைச் சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா (56). இவர், இதே பகுதி சோளம்பேடு சாலையில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். அன்வர் பாட்ஷா கடையின் பூட்டை உடைத்து 7 வெள்ளாடுகள் உள்பட 12 ஆடுகளை மர்ம ஆசாமிகள் நேற்று முன்தினம் திருடிச்சென்றனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து  அப்பகுதி கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: