தலைமை தகவல் ஆணையர் சின்கா பதவியேற்பு

புதுடெல்லி: மத்திய தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமாருக்கு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  மத்திய தகவல் ஆணையத்தில் 10 ஆணையர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வனஜா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா மற்றும் அமிதா பாண்டவ் ஆகிய நான்கு பேர் மட்டுமே ஆணையர்களாக இருக்கின்றனர்.  தலைமை தகவல் ஆணையராக இருந்த பிமால் ஜூல்கா பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக அந்த பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் தகவல்  ஆணையராக இருந்த யஷ்வர்தன் குமார் சின்கா தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர் நேற்று தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றார்.

Related Stories: