திருவொற்றியூரில் வெற்றி வேல் யாத்திரை இன்று தொடங்கும்: பாஜ தலைவர் எல்.முருகன் ேபட்டி

சென்னை: பாஜவின் வெற்றி வேல் யாத்திரை திட்டமிட்டபடிஇன்று தொடங்கும் என்று பாஜ தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.தி.நகர் பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ மாநில தலைவர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி:  நவம்பர் 6ம் தேதி வெற்றி வேல் யாத்திரை திட்டமிடப்பட்டிருந்தது. யாத்திரை திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் திருத்தணியில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைப்படி இன்று (நேற்று) லீவு விட்டிருக்கிறோம்.  நாளை(இன்று) எங்களது வெற்றி வேல் யாத்திரை திட்டமிட்டப்படி நடைபெறும். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கும்.

யாத்திரையில் முகக்கசவம் அணிந்து, சமூக இடைவெளியை  கடைப்பிடித்தோம். பொதுமக்களையும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். யாத்திரை குறித்து நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. முழுமையான தகவல் கிடைத்தவுடன் முடிவு செய்வோம்.  கொரோனா தொடர்பாக அரசு விதித்துள்ள விதிமுறைகளை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: