சென்னை: சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி முதல்வர் செல்வராஜ் என்பவரது கைப்பையை ஸ்கேன் செய்தனர். சத்தம் வந்தது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை தனியாக எடுத்து வைத்து விசாரணை நடத்தினர். ‘குண்டு எதுவும் இல்லை’ என்று செல்வராஜ் கூறினார். சந்தேகம் தீராத அதிகாரிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு பையை திறந்து சோதனையிட்டனர். அதற்குள் 9 எம்எம் ரக துப்பாக்கி குண்டு ஒன்று இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் பயணியையும், பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டையும் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.