வேலூரில் தீபாவளி வசூல் வேட்டை தீவிரம்: ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு: அடுத்தடுத்து சோதனையால் அதிகாரிகள் கலக்கம்

வேலூர்: வேலூர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். தீபாவளி பண்டிகையையொட்டி பிடிஓக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், நேற்று மாலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்ைல.

மேலும் அலுவலகம் முழுவதும் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் ஏதாவது உள்ளதா என சோதனையிட்டனர்.

அப்போது உதவி இயக்குநர் செந்தில்வேலன் காரில் இருந்தும், பாக்கெட்டில் இருந்தும் கணக்கில் வராத 92 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தொடர்ந்து அலுவலகம் முழுவதும் 10.30 மணி தாண்டியும் சோதனை நடந்தது. முழுமையாக சோதனை நிறைவடைந்தவுடன் இது தொடர்பான விரிவான தகவல்களை விஜிலென்ஸ் அறிவிக்கும் என்று தெரிகிறது.

Related Stories: