வேலூர்: வேலூர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். தீபாவளி பண்டிகையையொட்டி பிடிஓக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், நேற்று மாலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்ைல.
மேலும் அலுவலகம் முழுவதும் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் ஏதாவது உள்ளதா என சோதனையிட்டனர்.