வேல் யாத்திரைக்கு எதிரான தடையை எதிர்கொள்வோம்: பொறுப்பாளர் பேட்டி

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ தலைவர் எல்.முருகன் முன்னிலையில் விசிக மாநில இளைஞரணி துணை செயலாளர் வி.வெங்கடேஷ், ஈரோடு செயலாளர் பாஸ்கர், தமாகா திண்டுக்கல் கிழக்கு தலைவர் பாஸ்கர், காங்கிரஸ் ஓபிசி அணி வடசென்னை மாவட்ட துணைத்தலைவர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் பாஜவில் இணைந்தனர். தொடர்ந்து, பாஜ வெற்றி வேல்யாத்திரை பொறுப்பாளர் நரேந்திரன் அளித்த பேட்டியில், “வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தொடர்பாக அகில இந்திய தலைமையிடமும் வழிகாட்டுதலை கேட்டிருக்கிறோம். விரைவில் கட்சி தலைமையின் வழிகாட்டுதலும் தெரிய வரும். இதுபோன்ற தடைகளை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியும்” என்றார்.

Related Stories: