திருப்பூர்: திருப்பூருக்கு முதல்வர் நாளை வருவதை முன்னிட்டு அவரது நிகழ்சியில் பங்கேற்க உள்ள செய்தியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிகிழமை) திருப்பூருக்கு வருகிறார்.