யானையை சுட்டுக்கொன்ற விவசாயி கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே ஜவளகிரி வனச்சரகம் சென்னமாலம் கிராமம் அருகே நேற்று முன்தினம் அகழியில் 8 முதல் 10 வயதுள்ள பெண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் சென்று யானையின் சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனையில் குண்டடிபட்டு யானை உயிரிழந்தது தெரியவந்தது. ஜவளகிரி வனத்துறையினர் வனஉயிரின குற்ற வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துமல்லேஷ்(40), யானையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. அவரை நேற்று கைது செய்து, உரிமம் இல்லாத துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அடிக்கடி பயிர்களை நாசம் செய்ததால் யானையை சுட்டுக்கொன்றதாக விவசாயி கூறியுள்ளார்.

Related Stories: