திருமலை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. தொற்று குறைய தொடங்கியதால் கடந்த வாரம் முதல் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்களை பெற பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து, இலவச தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.