செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் தேவபிரகாஷ் (27). மறைமலைநகரில் பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவரது கடையின் அருகில் அடுத்தடுத்து டீக்கடை, ஓட்டல் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு தேவபிரகாஷ், பாஸ்ட்புட் வாசலில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது, அருகில் உள்ள டீக்கடைக்காரர், தனது கடைக்கு போர்டு வைக்க முயன்றார். இதை பார்த்த ஓட்டல்காரர் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே இதுபற்றி தேவபிரகாஷிடம் டீக்கடைக்காரர் கூறினார். அவர், ஓட்டல்காரரை தட்டி கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.