கூடுவாஞ்சேரி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுநூல் விளக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய, கூடுவாஞ்சேரி போலீசில் அனுமதி கேட்டனர். அதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். ஆனால், தடையை மீறி மனுநூல் விளக்க துண்டு பிரசுர வினியோகம் செய்ய கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். செங்கல்பட்டு தொகுதி செயலாளர் தே.தென்னவன் தலைமை தாங்கினார். நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூர் நகர செயலாளர் திராவிட முரளி, மறைமலைநகர் நகர செயலாளர் வீரா, இளைஞர் எழுச்சி பாசறை செயலாளர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் வண்டலூர் வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுவாஞ்சேரி நகர பொறுப்பாளர் ரமணா வரவேற்றார்.