புதுடெல்லி: பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா பிரான்சிலிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருந்தது. இதில், ஐந்து போர் விமானங்கள் ஏற்கனவே அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கியுள்ளன. நாளை (நவ. 4) மூன்று ரபேல் போர் விமானங்கள் பிரான்சின் இஸ்ட்ரெஸிலிருந்து இந்தியாவின் ஜாம்நகருக்கு வருகிறது. இந்த போர் விமானங்கள் சுமார் 8 மணி நேரம் இடைவிடாது வானில் பறக்கும். பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்படும்.