கடந்த வருட பிற்பகுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்து பின்னர் இவ் வருட மார்ச் மாதத்திலிருந்து உலகை உலுக்கி வருகிறது கொரோனா வைரஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதன் தாக்கம் குறைந்திருந்த போதிலும் தற்போது மீண்டும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் MIT நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் புதிய வகை மாஸ்க் ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.