ஸ்ரீவைகுண்டத்தில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை.: கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே விவசாய நிலத்தில் ஆடு மேய்த்த தகராறில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் கொலையாளிகளின் வீடுகள் மீது கல் வீசி தாக்கி, வாகனங்களை தீவைத்து கொளுத்தியதால் பதற்றமான சூழல் காணப்பட்டது.

விவசாயி ராமையா தாஸ் பாஜக அமைப்பு சாரா பிரிவில் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இசக்கி என்பவரின் ஆடுகள் ராமையாவின் விளைநிலத்தில் மேய்ந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமையா தாஸ் மீது கோவத்தில் இருந்த இசக்கி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இன்று காலை தென்திருப்பேரையில் உள்ள டி கடையில் டி குடித்துக்கொண்டு இருந்த ராமையா தாஸை இசக்கி  அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராமையா நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இதனை அடுத்து ஆத்திரத்தில் இருந்த ராமையாவின் உறவினர்கள் இசக்கியின் வீடு மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து, அவரின் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இசக்கியை உடனடியாக கைது செய்ய கூறி ராமையாவின் உறவினர்கள் நெல்லை- திருச்சந்தூர் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். கொலை செய்யப்பட்ட ராமையாவின் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: