குன்றத்தூர், :தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் வரும் 6-ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இந்த யாத்திரையை நடத்தும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கண்டித்து அண்ணா நகரைச் சேர்ந்த நர்மதா (42), என்ற பெண் குன்றத்தூர், பெரிய தெருவில் உள்ள சேக்கிழார் மணிமண்டபம் முன்பு தனது காதில் தானே மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு இன்று காலை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் தமிழர்களின் காதில் பாஜக தலைவர் எல்.முருகன் பூ சுற்றுவதாகவும், இந்த வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளிக்கக்கூடாது என்றும், சினிமா நடிகைகளையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்துக்கொண்டு முருகன் ரவுடிசத்தில் ஈடுபடுவதாக கூறி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.