இலங்கையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது.: கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன

இலங்கை: இலங்கையில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பானாந்துறை கடற்கரையில் நேற்று மாலை நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. உயிருடன் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை காண கடற்கரையில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.

15 முதல் 25 அடி நிலம் உள்ள திமிங்கலங்களை பானாந்துறை மீனவர்கள் மற்றும் கடற்படை போலீசார் நீண்ட நேரம் போராடி கடலில் கொண்டு சென்று விட்டனர். பானாந்துறை கடற்கரையில் இதற்கு முன்பு  திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வுகள் நடைபெறவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறி திமிங்கலங்களை காண பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் பானாந்துறை கடற்கரை பரபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: