புதுடெல்லி: கடந்த 1992ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜ மூத்த தலைவர்கள் அத்வானி உள்ளிட்ட 49 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2017ம் ஆண்டு முதல் லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜ மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த வரையிலும், பல்வேறு அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் காரணமாக நீதிபதி எஸ்.கே யாதவ்விற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தீர்ப்புக்கு பின்னர் அது விலக்கப்பட்டது. தீர்ப்புக்கு பின்னரும் தனக்கு சிறப்பு பாதுகாப்பை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என நீதிபதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.