கும்மிடிப்பூண்டி: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன்(26) மற்றும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த பிந்து(21) ஆகிய இருவருக்கும் கடந்த புதன்கிழமை கவரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேடை அருகில் மணமகன் நவீனின் உறவினர் மற்றும் நண்பர்கள் அவரிடம் அன்பளிப்பு மற்றும் மொய் பணத்தை கொடுத்தனர். அப்போது, மேடையில் இருந்த மர்ம நபர் மணமகன் நவீன் வைத்திருந்த பையில் ரூ.42 ஆயிரம் மொய் பணத்தை திருடிவிட்டு மாயமானார்.