விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் பின்பகுதி வழியாக மேம்பாலம் வரையிலான பழைய அருப்புக்கோட்டை ரோடு உள்ளது. 150மீ நீளமுள்ள சாலை வழியாக செந்திவிநாயகபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேம்பாலத்தில் இருந்து நகருக்குள் வருவதற்கான பாதையாக உள்ள பழைய அருப்புக்கோட்டை ரோடு வழியாக தினசரி நகருக்குள் உள்ள பருப்பு, எண்ணை மில்கள், கடைகள், குடோன்களுக்கு நூற்றுக்காணக்கான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. போக்குவரத்து நிறைந்த பழைய அருப்புக்கோட்டை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது.