பாபநாசத்தில் ரூ.பல லட்சம் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

வி.கே.புரம்: பாபநாசத்தில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றனர். பாபநாசத்தில் வசித்து வருபவர் சுபாஷ்சந்திரபோஸ் (45). இவர், பாபநாசத்திலுள்ள சித்தர் கோட்டப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இவரது தோட்டத்திலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 4 சந்தன மரங்களை யாரோ வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.

இதுகுறித்து சுபாஷ்சந்திர போஸ் வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: