ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வரத்தான மாடுகளில் 70 சதவீதம் விற்பனையானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரிக்கரை அருகில் வியாழன்தோறும் மாட்டு சந்தை நடக்கிறது. அதன்படி இன்று நடந்த மாட்டு சந்தைக்கு, நேற்று இரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டத்தில் இருந்து மாடுகள் வரத்துவங்கியது. மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், சந்தையில் வரத்தான மாடுகளில், 70 சதவீதம் விற்பனையானது.