அரியானா: கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 3 இளைஞர்களை அரியானா காவல்துறை கைது செய்துள்ளது. நிகிதா தோமர் என்ற 21 வயது கல்லூரி மாணவி நேற்று தேர்வு எழுதுவதற்காக பரிதாபாத்தில் உள்ள கல்லூரிக்கு சென்றுள்ளார். அவரை வழிமறித்த சிலர் காரில் கடத்த முயன்றனர். அப்போது கூச்சலிட்டபடி காரில் ஏற மறுத்து நிகிதா போராடினார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் நிகிதாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அதே காரில் தப்பி ஓடிவிட்டார். குண்டு துளைத்ததால் படுகாயம் அடைந்த நிகிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.